செய்திகள்
பாபர் அசாம், நசீர் ஹுசைன்

விராட் கோலியாக இருந்திருந்தால் ஒவ்வொருவரும் பேசியிருப்பார்கள்: பாபர் அசாம் குறித்து நசீர் ஹுசைன் கருத்து

Published On 2020-08-06 09:40 GMT   |   Update On 2020-08-06 09:40 GMT
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த பாபர் அசாமை நசீர் ஹுசைன் பாராட்டியுள்ளார்.
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி மழையால் தடைபட்டது.

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். ஆண்டர்சன், பிராட், ஆர்சர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோரின் பந்துகளை எந்தவித அச்சமின்றி எதிர்கொண்டு கவர் டிரைவ் சாட் மூலம் அசத்தினார்.

இதை விராட் கோலி செய்திருந்தால் ஒவ்வொருவரும் பேசியிருப்பார்கள். பாபர் அசாம் என்பதால் ஒருவரும் பேசவில்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நசீர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

மேலும், பாபர் அசாம் இளம் வீரர், நேர்தியானவர், அனைத்து ஷாட்டுகள் விளையாடும் ஆக்ரோசத்தையும் பெற்றுள்ளார். இனிமேல் இந்த காலக்கட்டத்தின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் நான்கு பேர் அல்லை. பாபர் அசாம் உடன் ஐந்து பேர் எனவும் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News