செய்திகள்
சஞ்சய் தோபால்

டெல்லி முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் தோபால் கொரோனா வைரஸுக்கு பலி

Published On 2020-06-29 09:54 GMT   |   Update On 2020-06-29 09:54 GMT
டெல்லி முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் தோபால் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
டெல்லி மாநில கிரிக்கெட் வீரரும், 23 வயதிற்கு உட்பட்டோருக்கான டெல்லி அணியின் சப்போர்ட் ஸ்டாஃபாகவும் இருந்தவர் சஞ்சய் தோபால். 53 வயதான இவர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் பஹதுர்காரில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த வாரம் சேர்க்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், அவர் உடல்நிலை மோசமடைய திவார்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பிளாஸ்மா சகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

இந்திய அணிக்காக விளையாடிய டெல்லியில் சேவாக், கவுதம் காம்பிர் மற்றும் மிதுன் மன்ஹாஸ் ஆகியோருக்கு நன்றாக தெரிந்த நபராவார். இவர் கிளப் அளவிலான கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமானவர். சன்னெட் கிரிக்கெட் கிளப்பிற்காக விளையாடியுள்ளார். தரக் சிக்ஹா அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
Tags:    

Similar News