செய்திகள்
எம்எஸ் டோனி

வளர்ந்த தாடி: புதிய தோற்றத்தில் எம்எஸ் டோனி

Published On 2020-06-28 10:15 GMT   |   Update On 2020-06-28 10:15 GMT
பொது முடக்கத்தால் கடந்த மூன்று மாதங்களாக வீட்டிற்குள்ளேயே இருக்கும் எம்எஸ் டோனி, வளர்ந்த தாடியுடன் புதிய தோற்ற படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி. அவ்வப்போது புதுவகை தோற்றத்துடன் காட்சியளிப்பது வழக்கம். ஐபிஎல் தொடரின்போது தலையில் முடியை குறைத்துக் கொண்டு தாடியுள்ளாமல் இளம் வீரர் போன்று காட்சியளிப்பார்.

தற்போது பொது முடக்கத்தால் டோனி பண்ணை வீட்டில் மனைவி, மகளுடன் நேரத்தை செலவழித்தார். மகளுடன் பைக் ரேஸ், செல்ல நாய்களுடன் விளையாடுவது போன்ற படங்களை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் வளர்ந்த தாடியுடன் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தை டோனியை வழக்கமான வயதை விட மிகவும் வயதானவராக காட்டுவதாக ரசிகர்கள் ஆச்சர்யமாக கூறி வருகிறார்கள்.

சில ரசிகர்கள் எம்எஸ் டோனி மீண்டும் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பும் மனநிலையில் தல டோனி இல்லை. வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறார் என்று தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News