செய்திகள்
முகமது ஆசிப்

எல்லோருக்கும் 2-வது வாய்ப்பு கிடைத்தது: பாக். என்னை மோசமாக நடத்தியது- முகமது ஆசிப் புலம்பல்

Published On 2020-05-04 10:35 GMT   |   Update On 2020-05-04 10:35 GMT
மேட்ச் பிக்சிங்சில் ஈடுபட்டு கிரிக்கெட் வாழ்க்கையை தொலைத்த முகமது ஆசிப் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மீது குற்றம்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் அணி லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடும்போது அந்த அணியின் கேப்டன் சல்மான் பட், வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஆசிப், முகமது அமிர் ஆகியோர் மேட்ச் பிக்சிங் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர்.

பின்னர் ஐசிசி-யால் தண்டனை பெற்றனர். முகமது ஆசிப்புக்கு 7 வருடங்களும் சல்மான் பட், முகமது அமிர் ஆகியோருக்கு தலா ஐந்து வருடங்களும் தடைவிதிக்கப்பட்டன.

முகமது அமிர் தடைக்குப்பின் மீண்டும் சர்வதேச அணிக்கு திரும்பினார். சல்மான் பட் சர்வதேச அணிக்கு திரும்பவில்லை என்றாலும் பாகிஸ்தான் பிரிமீயர் லீக்கில் விளையாடினார்.

முகமது ஆசிப்புக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு என்னை இன்னும் சிறப்பான வகையில் கையாண்டிருக்கலாம் என முகமது ஆசிப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முகமது ஆசிப் கூறுகையில் ‘‘ஒவ்வொருவரும் தவறு செய்தனர். நானும் செய்தேன்.  எனக்கும் முன்பும், எனக்கு பின்பும் கூட மேட்ச் பிக்சிங் நடைபெற்றுள்ளது. எனக்கு முன்பு உள்ளவர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டில் பணிபுரிந்து வருகிறார்கள். எனக்கு பின்பு ஈடுபட்டவர்கள் தற்போது அணியில் விளையாடி வருகிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் 2-வது வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் என்னைப் போன்ற சில பேருக்கும் மட்டும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. உலகளவில் தலைசிறந்த பந்து வீச்சாளராக இருந்த என்னை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு காப்பாற்ற எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை’’ என்றார்.

முகமது ஆசிப் 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 106 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
Tags:    

Similar News