செய்திகள்
லசித் மலிங்கா

ஐபிஎல்-லின் தலைசிறந்த பந்து வீச்சாளர் மலிங்காதான்: கெவின் பீட்டர்சன் சொல்கிறார்

Published On 2020-04-21 09:55 GMT   |   Update On 2020-04-21 09:55 GMT
ஐபிஎல் தொடரின் தலைசிறந்த பந்து வீச்சாளர் யார் என்றால் அது மலிங்காதான் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் ஐபிஎல் 2020 சீசன் அடுத்த அறிவிப்பு வரும் வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள் சிறந்த நிகழ்வுகள் குறித்து பேசிவருகிறார்கள்.

ஸ்டார் போர்ட்ஸ் முன்னாள் வீரர்கள், வல்லூனர்களை கொண்டு நடத்திய கருத்துக் கணிப்பில் டோனி, ரோகித் சர்மா ஆகியோர் சிறந்த கேப்டன்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ஐபிஎல்-லில் எல்லாக் காலக்கட்டத்திலும் சிறந்த பந்து வீச்சாளர் மலிங்காதான் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மலிங்கா கூறுகையில் ‘‘என்னை பொறுத்த வரைக்கும் மலிங்காதான் சிறந்த பந்து வீச்சாளர். அவர் விளையாடிய போட்டிகளையும் தொடர்ச்சியாக யார்க்கர் பந்துகளை வீசியதையும் ஒவ்வொருவரும் கவனித்திருக்கலாம். மலிங்கா என்னுடைய பையன்.



நான் நரைன்-ஐத்தான் தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில்தான் அவரால் விக்கெட் வீழ்த்த முடிந்தது. மேலும், அவரது பந்து வீச்சு குறித்து விமர்சனமும் எழுந்தது. அதனால் நரைன் பெயரை சொல்ல தயங்கினேன். மலிங்காவை தேர்வு செய்தேன்’’ என்றார்.
Tags:    

Similar News