செய்திகள்
கிரிக்கெட்டை விட வாழ்க்கைக்கு நிறைய இருக்கு: கொரோனா பீதியால் பாகிஸ்தானில் இருந்து வெளியேறுகிறார் கிறிஸ் லின்
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் சதம் அடித்து தனது அணியை அரையிறுதிக்கு முன்னேறச் செய்த நிலையில், சொந்த நாடு திரும்புகிறார் கிறிஸ் லின்.
பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மிகப்பெரிய அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 99 சதவீத விளையாட்டு தொடர்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதால் எப்படியாவது போட்டியை முடித்துவிட வேண்டும் என விரும்புகிறது.
இதனால் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டங்களை ரசிகர்கள் இல்லாமல் நடத்தியது. பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாடு திரும்பிய போதிலும் லாகூர் குவாலண்டர்ஸ் அணிக்காக விளையாடி வந்த கிறிஸ் லின் நேற்றைய போட்டியில் கலந்து கொண்டு சதம் அடித்தார். இவரது சதத்தால் லாகூர் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்நிலையில் கிறிஸ் லின் சொந்த நாடு திரும்புகிறார். ‘‘கிரிக்கெட்டை விட வாழ்க்கைக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன’’ என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இருந்து வெளியேறுவதை உறதிபடுத்தியுள்ளார்.
மேலும் இதுகுறித்து கிறிஸ் லின் கூறுகையில் ‘‘ஒட்டுமொத்தமாக என் நேரத்தை மகிழ்ச்சியாக செலவழித்தேன். துரதிருஷ்டவசமாக இந்த சூழ்நிலையில் சொந்த நாடு திரும்ப முடிவு செய்துள்ளேன். நான் எப்போதுமே கிரிக்கெட்டை விட வாழ்க்கைக்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது என சொல்லியிருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதால் எப்படியாவது போட்டியை முடித்துவிட வேண்டும் என விரும்புகிறது.
இதனால் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டங்களை ரசிகர்கள் இல்லாமல் நடத்தியது. பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாடு திரும்பிய போதிலும் லாகூர் குவாலண்டர்ஸ் அணிக்காக விளையாடி வந்த கிறிஸ் லின் நேற்றைய போட்டியில் கலந்து கொண்டு சதம் அடித்தார். இவரது சதத்தால் லாகூர் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்நிலையில் கிறிஸ் லின் சொந்த நாடு திரும்புகிறார். ‘‘கிரிக்கெட்டை விட வாழ்க்கைக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன’’ என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இருந்து வெளியேறுவதை உறதிபடுத்தியுள்ளார்.
மேலும் இதுகுறித்து கிறிஸ் லின் கூறுகையில் ‘‘ஒட்டுமொத்தமாக என் நேரத்தை மகிழ்ச்சியாக செலவழித்தேன். துரதிருஷ்டவசமாக இந்த சூழ்நிலையில் சொந்த நாடு திரும்ப முடிவு செய்துள்ளேன். நான் எப்போதுமே கிரிக்கெட்டை விட வாழ்க்கைக்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது என சொல்லியிருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.