செய்திகள்
டேல் ஸ்டெயின்

கொரோனா வைரஸ் தொற்று பீதி: பாகிஸ்தானில் இருந்து வெளியேறினார் டேல் ஸ்டெயின்

Published On 2020-03-15 10:42 GMT   |   Update On 2020-03-15 10:42 GMT
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடி வந்த தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் சொந்த நாடு திரும்பியுள்ளார்.
பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றாமல் இருக்க பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

போட்டி இறுதி கட்டத்தை எட்டுவிட்டதால் நாட்களை குறைத்து தொடரை முடித்துவிட திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள இதற்கிடையில் வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் தொடரை இடையிலேயே முடித்துக் கொண்ட சொந்த நாடு திரும்பி வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின் சொந்த நாடு திரும்பியுள்ளார். இவருக்கு முன் 13 வீரர்கள் சொந்த நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து டேல் ஸ்டெயின் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘என்னால் இதை நம்ப முடியவில்லை. ஆனால், துரதிருஷ்டவசமாக நான் பாகிஸ்தானில் இருந்து சொந்த நாடு திரும்ப வேண்டியதுள்ளது. இஸ்லாமாபாத் யுனைடெட் அணி ரசிகர்கள் அளித்த ஆதரவுக்காக நன்றி சொல்ல முடியாது.

நீங்கள் அற்புதமான ஆதரவை கொடுத்தீர்கள். ரசிகர்களுக்கு நன்றி, விரைவில் பாகிஸ்தான் திரும்புவேன் என்று நம்புகிறேன். ஆரோக்கியமாக இருங்கள்.. உங்கள் கைகளை சுத்தமாக கழுவுங்கள்’’ என்றாார்.
Tags:    

Similar News