செய்திகள்
நியூசிலாந்துக்கு எதிரான 3-வது போட்டியில் விளையாடிய இந்திய அணி

31 வருடத்திற்குப் பிறகு ஒயிட்வாஷ் ஆகி மோசமான சாதனையை பதிவு செய்த இந்தியா

Published On 2020-02-11 10:14 GMT   |   Update On 2020-02-11 10:14 GMT
நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் தோல்வியை சந்தித்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது.
நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை நியூசிலாந்து 3-0 எனக்கைப்பற்றியது.

ஒரு போட்டியை கூட வெல்ல முடியாமல் இந்தியா ஒயிட்வாஷ் ஆனது. இதன்மூலம் 1989-ம் ஆண்டுக்குப்பிறகு முதன்முறையாக மூன்று போட்டிகளுக்கு மேல் கொண்ட தொடரில் ஒயிட்வாஷ் ஆகி மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி.

இதற்கு முன் 1989-ல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இந்தியா ஒயிட்வாஷ் ஆகியிருந்தது. அதன்பின் தற்போது ஒயிட்வாஷ் ஆகியுள்ளது.
Tags:    

Similar News