செய்திகள்
ஜோ ரூட்

டெஸ்டில் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதே இலக்கு: இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்

Published On 2020-01-22 11:10 GMT   |   Update On 2020-01-22 11:10 GMT
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற எங்களுக்கு, அடுத்த இலக்கு நம்பர் ஒன் இடம்தான் என இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது கிடையாது.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வியை சந்தித்தது. 2-வது டெஸ்டில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று அசத்தியது.

இந்த வெற்றியின் மூலம் 2-1 என முன்னிலையில் உள்ளது. கடந்த 8 வருடத்திற்கு பிறகு வெளிநாட்டு மண்ணில் இங்கிலாந்து பெற்ற முதல் இன்னிங்ஸ் வெற்றி இதுவாகும். இந்த வெற்றி அந்த அணிக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. இந்த உத்வேகத்துடன் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதே இலக்கு என கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News