செய்திகள்
டிரென்ட் போல்ட், ரோகித் சர்மா

டிரென்ட் போல்ட் VS ரோகித் சர்மா: ரசிகர்களுக்கு விருந்து அளிப்பதாக இருக்கும்- மைக் ஹெசன்

Published On 2020-01-22 10:31 GMT   |   Update On 2020-01-22 10:31 GMT
நியூசிலாந்து - இந்தியா இடையிலான ஒருநாள் தொடரில் டிரென்ட் போல்ட் - ரோகித் சர்மா இடையிலான மோதல் ரசிகர்களுக்கு விருந்து அளிப்பதாக இருக்கும் என நியூசிலாந்து முன்னாள் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளைமறுநாள் தொடங்குகிறது. அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

ஒருநாள் கிரிக்கெட்டில் புது பந்து (NEW BALL) சிறிய அளவில் ஸ்விங் ஆகும். மேலும் நியூசிலாந்து சீதோஷ்ண நிலையில் கூடுதலாக ஸ்விங் ஆகும். புது பந்தில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் அபாரமாக பந்து வீசக்கூடியவர். இவர் புது பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர்.

அதேவேளையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் துணைக் கேப்டனான ரோகித் சர்மா ஸ்விங் பந்தை சிறப்பாக எதிர்கொண்டது கிடையாது.

இதனால் ரோகித் சர்மா VS டிரென்ட் போல்ட் மோதல் ரசிகர்களுக்கு விருந்து அளிப்பதாக இருக்கும் என நியூசிலாந்து முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News