செய்திகள்
இரண்டாவது பாதியில் கோல் அடித்து ஜாம்ஷெட்பூரை வெற்றிக்கு அழைத்துச் சென்ற செர்ஜியோ காஸ்டெல்

ஐஎஸ்எல் கால்பந்து - கேரளாவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்

Published On 2020-01-20 02:23 GMT   |   Update On 2020-01-20 02:23 GMT
ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரளா அணியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர் அணி.
ஜாம்ஷெட்பூர்:

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

ஜாம்ஷெட்பூரில் நேற்று இரவு நடந்த 63-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் கேரளா அணியின் மெஸ்சி பவுல்ட் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜாம்ஷெட்பூர் அணியின் கோஸ்டா 39வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து முதல் பாதி முடிவில் 1-1 என இரு அணிகளும் சமனிலை வகித்தன.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கேரளா அணியின் பர்த்லோமியு 56-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஜாம்ஷெட்பூர் அணியின் செர்ஜியோ காஸ்டெல் 75வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார்.

இறுதிக்கட்டத்தில் கேரளா அணியின் பர்த்லோமியு சொந்த (ஓன்) கோல் அடித்தார். இதனால் ஜாம்ஷெட்பூர் அணி 3-2 என்ற கணக்கில் கேரளாவை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் ஜாம்ஷெட்பூர் 16 புள்ளிகளுடன் 6வது இடத்திலும், கேரளா 14 புள்ளிகளுடன் 8வது இடத்திலும் உள்ளது.
Tags:    

Similar News