செய்திகள்
விராட் கோலி, ஆரோன் பிஞ்ச்

கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா பந்து வீச்சு: ஆஸி. அணியில் ஹாசில்வுட்

Published On 2020-01-19 08:07 GMT   |   Update On 2020-01-19 11:25 GMT
பெங்களூருவில் நடக்கும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடக்கிறது. இதில் வெற்றி பெற்ற அணி தொடரை கைப்பற்றும்.

டாஸ் சுண்டபட்டதில் ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பந்து வீசுகிறது. இந்திய அணியில் மாற்றமில்லை. ஆஸ்திரேலியா அணியில் ஹாசில்வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News