செய்திகள்
கோல் அடித்த மகிழ்ச்சியை கொண்டாடும் கொல்கத்தா அணியினர்

ஐஎஸ்எல் கால்பந்து - கோவாவை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது கொல்கத்தா

Published On 2020-01-19 02:00 GMT   |   Update On 2020-01-19 02:00 GMT
கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவா அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி மீண்டும் முதலிடத்தை பிடித்தது கொல்கத்தா அணி.
கொல்கத்தா:

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த 62-வது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா-எப்.சி.கோவா அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் எந்த அணியும் கோல் அடிக்காததால் 0-0 என சமனிலை வகித்தன. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 47-வது நிமிடத்தில் பிரித்தமும், 88-வது நிமிடத்தில் ரானேவும் கோல் அடித்தனர். இறுதியில், கொல்கத்தா அணி 2-0 என்ற கணக்கில் கோவா அணியை வீழ்த்தியது.

கொல்கத்தா அணி தான் ஆடிய 13-வது ஆட்டத்தில் பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் இருந்து மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.

கோவா அணி தான் ஆடிய 13-வது ஆட்டத்தில் சந்தித்த 3-வது தோல்வி இது. முதலிடத்தில் இருந்து அந்த அணி 2-வது இடத்துக்கு இறங்கியது.
Tags:    

Similar News