செய்திகள்
அனில் கும்ப்ளே

எல்லோரும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்புகிறார்கள்: அனில் கும்ப்ளே

Published On 2020-01-17 11:28 GMT   |   Update On 2020-01-17 11:28 GMT
ஐசிசி ஆட்சி மன்றக்குழு நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டிக்கு முன்மொழிந்த நிலையில், எல்லோரும் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்புகிறார்கள் என அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் தற்போது ஐந்து நாட்களாக நடைபெற்று வருகிறது. ஐசிசி தற்போது அதிக அளவிலான சர்வதேச சாம்பியன்ஸ் போட்டிகளை நடத்த விரும்புகிறது. இதற்கிடையில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரையையும் நடத்தி வருகிறது.

சர்வதேச போட்டிகளை அதிக அளவில் நடத்த வேண்டுமென்றால் நாட்கள் வேண்டும். இதனால் டெஸ்ட் போட்டியை நான்கு நாட்களாக குறைத்தால் ஐசிசி தொடரை நடத்த அதிகமான நாட்கள் கிடைக்கும் என நினைத்தது.

இதனால் ஐசிசி ஆட்சி மன்றக்குழு ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்டை நான்கு நாட்களாக குறைக்க முன்மொழிந்துள்ளது.

தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் பெரும்பாலான வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் தலைவரான அனில் கும்ப்ளே, எல்லோரும் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘ஒவ்வொருவரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை விளையாட விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன். இது தெளிவாக தெரிகிறது. தற்போதைய காலத்து வீரர்கள் ஐந்து நாள் கிரிக்கெட் விரும்புகிறார்கள்’’ என்றார்.

அனில் கும்ப்ளே தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் கமிட்டி வரும் மார்ச் மாதம் முன்மொழிவு குறித்து விவாதம் நடத்த இருக்கிறது.
Tags:    

Similar News