செய்திகள்
கிராலியை அவுட்டாக்கிய நுர்ஜே

3வது டெஸ்டில் பேட்ஸ்மேன்கள் நிதான ஆட்டம் - முதல் நாள் முடிவில் இங்கிலாந்து

Published On 2020-01-16 15:41 GMT   |   Update On 2020-01-16 15:41 GMT
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நிதானமாக ஆட, முதல் நாள் முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது.
போர்ட் எலிசபேத்:

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

செஞ்சூரியனில் நடந்த முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 107 ரன் வித்தியாசத்திலும், கேப்டவுனில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இங்கிலாந்து 189 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் 1-1 என்ற சமநிலை இருக்கிறது.
 
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் இன்று போர்ட் எலிசபெத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிராலி, சிப்லி ஆகியோர் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்த நிலையில்
சிப்லி 36 ரன்னில் அவுட்டானார்.

அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கிராலி 44 ரன்னில் வெளியேறினார்.  அடுத்து இறங்கிய ஜோ டென்லி 25 ரன்னிலும், கேப்டன் ஜோ ரூட் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து இறங்கிய பென் ஸ்டோக்ஸ், ஆலி போப் நிதானமாக ஆடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்,

முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது, ஸ்டோக்ஸ் 38 ரன்னும், போப் 39 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 2 விக்கெட், நுர்ஜே, மகாராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
Tags:    

Similar News