செய்திகள்
ரிஷப் பண்ட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்

Published On 2020-01-15 15:00 GMT   |   Update On 2020-01-15 15:00 GMT
மூளை அதிர்ச்சி காரணமாக ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இதில், முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. 
அதன்படி, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. 44-வது ஓவரை பேட் கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை பவுன்சராக வீசினார். ரிஷப் பண்ட் அதை லெக் சைடு தூக்கி அடிக்க முயன்றார்.
 
பந்து பேட்டின் விளிம்பில் பட்டு ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. இதனால் ரிஷப் பண்ட் அதிர்ச்சிக்குள்ளானார். இந்திய அணி டாக்டர் அவரை பரிசோதித்ததில் மூளை அதிர்ச்சி அடைந்திருப்பதாக தெரியவந்தது.

இதனால் ரிஷப் பண்ட் பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்குப் பதிலாக கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை செய்தார். டாக்டர்கள் அவரை கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், மூளை அதிர்ச்சி காரணமாக பாதிப்பு அடைந்துள்ள ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் விளையாட மாட்டார் என பிசிசிஐ இன்று தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News