செய்திகள்
நாதன் லயன், டிம் பெய்ன்

சிட்னி டெஸ்டுக்கான ஆஸ்திரேலியா லெவனில் மாற்றம் இருக்காது: டிம் பெய்ன்

Published On 2020-01-02 11:21 GMT   |   Update On 2020-01-02 11:21 GMT
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஒரே ஆடுகளமான சிட்னியில், ஆஸ்திரேலியா லெவன் அணியில் மாற்றம் இருக்காது என டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த், மேல்போர்ன் மைதானங்களில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அபாரமான வெற்றியை பெற்றது.

இரண்டு ஆடுகளங்களும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானவை. ஆஸ்திரேலியா 6 பேட்ஸ்மேன்கள், மூன்று வேகப்பந்து, ஒரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியது.

3-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஆடுகளங்களில் சிட்னி மட்டுமே சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது. இதனால் ஆஸ்திரேலியா தனது அணியில் மிட்செல் ஸ்வெப்சன் என்ற சுழற்பந்து வீச்சாளரை சேர்த்துள்ளது.

மூன்று வேகப்பந்து, இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆஸ்திரேலியா களம் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மெல்போர்னில் விளையாடிய அதே லெவன் அணிதான் களம் இறங்கும் என அந்த அணி கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிம் பெய்ன் கூறுகையில் ‘‘நாங்கள் ஆடுகளத்தை காலையில் பார்வையிட்ட பின்னர்தான் முடிவு எடுக்கப்படும். பெரும்பாலும் ஆடும் லெவன் அணியில் மாற்றம் இருக்காது. ஆனால், ஒருவேளை நாளை காலை ஆடுகளத்தை பார்வையிட்ட பின்னர், மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் வேண்டுமா? என்பது குறித்து முடிவு செய்வோம்.

நாங்கள் ஒரு ஸ்பின்னருடன் விளையாட முடிவு செய்தால், ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைத்தால் லாபஸ்சாக்னேவை பகுதி நேர பந்து வீச்சாளராக பயன்படுத்துவோம்’’ என்றார்.
Tags:    

Similar News