செய்திகள்
அஸ்வின்

ரஞ்சி டிராபி: கர்நாடகாவை 336 ரன்னில் ஆல்-அவுட் ஆக்கியது தமிழ்நாடு

Published On 2019-12-10 06:46 GMT   |   Update On 2019-12-10 06:46 GMT
அஸ்வின் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்த கர்நாடகாவை முதல் இன்னிங்சில் 336 ரன்னில் ஆல்-அவுட் ஆக்கியது தமிழ்நாடு.
ரஞ்சி டிராபி 2019-2020 சீசனில் முதல் சுற்று ஆட்டம் நேற்று தொடங்கியது. திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற கர்நாடகா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 43 ரன்கள் சேர்த்தார். 3-வது வீரராக களம் இறங்கிய தேவ்தத் படிக்கல் 75 ரன்கள் சேர்த்தார். தேஷ்பாண்டே 65 ரன்கள் அடிக்க கர்நாடகா முதல்நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. கே கவுதம் 39 பந்தில் 51 ரன்கள் விளாச கர்நாடகா 336 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்சில் ஆல்-அவுட் ஆனது.

தமிழ்நாடு அணி சார்பில் ஆர். அஸ்வின் 4 விக்கெட்டும், விக்னேஷ் மற்றும் சித்தார்த் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
Tags:    

Similar News