செய்திகள்
இந்திய பெண்கள் கால்பந்து அணி

தெற்காசிய போட்டிகள்: 3-வது முறையாக தங்கம் வென்றது இந்திய பெண்கள் கால்பந்து அணி

Published On 2019-12-09 15:02 GMT   |   Update On 2019-12-09 15:02 GMT
தெற்காசிய போட்டியில் நேபாளத்தை 2-0 என வீழ்த்தி இந்திய பெண்கள் கால்பந்து அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
7 நாடுகள் பங்கேற்றுள்ள 13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் உள்ள காத்மண்டு மற்றும் போக்ஹராவில் நடந்து வருகிறது.

இன்று பெண்களுக்கான கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா - நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 18-வது நிமிடத்தில் பாலா தேவி முதல் கோலை பதிவு செய்தார். 56-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடிக்க இந்தியா 2-0 என வெற்றி பெற்றது.
Tags:    

Similar News