செய்திகள்
மாலத்தீவு அணி 8 ரன்னில் ஆல்-அவுட்

9 வீராங்கனைகள் டக்அவுட்: 8 ரன்னில் சுருண்ட மாலத்தீவு

Published On 2019-12-08 09:17 GMT   |   Update On 2019-12-08 09:17 GMT
தெற்காசிய விளையாட்டில் மாலத்தீவு வீராங்கனைகள் 9 பேர் டக்அவுட் ஆக, அந்த அணி 8 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆல்-அவுட் ஆனது.
தெற்காசிய விளையாட்டில், பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் நேற்று நடந்த நேபாளத்துக்கு எதிரான ஆட்டத்தில் மாலத்தீவு 11.3 ஓவர்களில் வெறும் 8 ரன்னில் சுருண்டது. 9 வீராங்கனைகள் டக்-அவுட் ஆனார்கள்.

தொடக்க வீராங்கனை அய்மா அஷ்சாத் 1 ரன் எடுத்தார். மற்ற 7 ரன்களும் எக்ஸ்டிரா வகையில் (வைடு) கிடைத்தது. இந்த ஆட்டம் ஐ.சி.சி. அங்கீகாரம் பெற்றது.

பெண்கள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு அணியின் 2-வது குறைந்த ஸ்கோர் இதுவாகும். மாலி அணி 6 ரன்னில் முடங்கியதே மோசமான ஸ்கோராக நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இலக்கை நேபாளம் அணி 7 பந்துகளில் எட்டிப்பிடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Tags:    

Similar News