செய்திகள்
முஷ்டாபிஜூர் ரஹ்மான் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ள வங்காளதேசம் அனுமதி
ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் ஏலத்தில் முஷ்டாபிஜூர் ரஹ்மான் கலந்து கொள்ள வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு அனுமதி அளித்துள்ளது.
வங்காளதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜூர் ரஹ்மான். இவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடும்போது அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது. பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றார். அந்த அணிக்காக விளையாடும்போது அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் கடந்த முறை ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ள வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு அவருக்கு அனுமதி வழங்கவில்லை.
தற்போது காயத்தில் இருந்து முழுவதும் குணமாகிவிட்டார். காயம் ஏற்படாத வண்ணம் அவர் தனது வேலைப்பளுவை நிர்வகித்து கொள்வார் என்பதால், தற்போது 2020 தொடருக்கான ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதி அளித்துள்ளது.
வருகிற 19-ந்தேதி கொல்கத்தாவில் ஏலம் நடக்கிறது. அதில் கலந்து கொள்ள வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்ய வரும் 9-ந்தேதி மாலை 5 மணியுடன் காலக்கெடு முடிவடைகிறது.
இதனால் கடந்த முறை ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ள வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு அவருக்கு அனுமதி வழங்கவில்லை.
தற்போது காயத்தில் இருந்து முழுவதும் குணமாகிவிட்டார். காயம் ஏற்படாத வண்ணம் அவர் தனது வேலைப்பளுவை நிர்வகித்து கொள்வார் என்பதால், தற்போது 2020 தொடருக்கான ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதி அளித்துள்ளது.
வருகிற 19-ந்தேதி கொல்கத்தாவில் ஏலம் நடக்கிறது. அதில் கலந்து கொள்ள வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்ய வரும் 9-ந்தேதி மாலை 5 மணியுடன் காலக்கெடு முடிவடைகிறது.