செய்திகள்
ரிஷப் பந்த், விராட் கோலி

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் எம்எஸ் டோனியின் சாதனையை முறியடிப்பாரா?

Published On 2019-12-05 08:33 GMT   |   Update On 2019-12-05 08:33 GMT
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் அதிக பேரை அவுட்டாக்கிய எம்எஸ் டோனியின் சாதனையை ரிஷப் பந்த் முறியடிக்க வாய்ப்புள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை பெங்களூருவில் தொடங்குகிறது.

இந்தத் தொடரில் எம்எஸ் டோனியின் சாதனையை ரிஷப் பந்த் முறியடிக்க வாய்ப்புள்ளது. எம்எஸ் டோனி ஏழு போட்டிகளில் ஐந்து பேரை அவுட்டாக்கி முதல் இடத்தில் இடத்தில் உள்ளார். ரிஷப் பந்த் 7 போட்டிகளில் விளையாடி மூன்று பேரை அவுட்டாக்கியுள்ளார்.

மூன்று போட்டிகளில் மூன்று பேரை கேட்ச், ஸ்டம்பிங் அல்லது ரன்அவுட் மூலம் வெளியேற்றினார் டோனியின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த தினேஷ் ராம்தின் ஐந்து பேரையும், அந்த்ரே பிளெட்சர் நான்கு பேரையும், தினேஷ் கார்த்திக் மூன்று பேரையும் வீழ்த்தி அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News