செய்திகள்
ஷிவம் டுபே

நான் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரராக களம் இறங்கவில்லை

Published On 2019-12-05 08:12 GMT   |   Update On 2019-12-05 08:12 GMT
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டி20 அணியில் இடம் பிடித்துள்ள வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஷிவம் டுபே, இடத்தை தக்கவைக்க விரும்புகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியில் ஹர்திக் பாண்டியா வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக உள்ளார். காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள அவர், தற்போது ஓய்வில் உள்ளார்.

இதனால் வங்காளதேச அணிக்கெதிரான டி20 தொடரில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஷிவம் டுபே இடம் பிடித்திருந்தார். கடைசி இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இடது கை பேட்ஸ்மேன் ஆன ஷிவம் டுபே, ஹர்திக் பாண்டியாவுக்கான மாற்று வீரர் நான் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷிவம் டுபே கூறுகையில் ‘‘ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரராக எனக்கு வாய்ப்பு கிடைத்ததாக நினைக்கவில்லை. ஆனால், எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை பயன்படுத்தி எனது நாட்டிற்காக சிறந்த ஆட்டத்தை ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வேன். எனது நாட்டிற்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளேன். அதை சிறப்பாக செய்வேன்.



வீரர்கள் அறையில் ஒவ்வொருவரும் ஆதரவாக இருக்கின்றனர். கேப்டன் விராட் கோலி, அணி நிர்வாகத்திடம் இருந்து சிறந்த வகையில் ஆதரவு கிடைக்கிறது. அவர்கள் எனக்கு நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளனர். ஆகவே, சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வீரர்கள் அறையில் இருப்பதாக உணர்கிறேன்’’ என்றார்.
Tags:    

Similar News