செய்திகள்
மிக்கி ஆர்தர்

இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராகிறார் மிக்கி ஆர்தர்

Published On 2019-12-04 08:18 GMT   |   Update On 2019-12-04 08:18 GMT
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மிக்கி ஆர்தர், தற்போது இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட இருக்கிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் மிக்கி ஆர்தர். இவரது தலைமையில் பாகிஸ்தான் ஐசிசி சாம்பியன்ஷிப்பை வென்றது. டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது. மேலும் குறிப்பிடத் தகுந்த சில வெற்றிகளை பெற்றது.

ஆனால் இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் தலைமை பயிற்சியாளர் பதவில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட இருக்கிறார். இவரது பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளாகும். இலங்கை அணி ஏற்கனவே கிராண்ட் பிளவரை பேட்டிங் பயிற்சியாளராகவும், டேவிட் சாகரை பந்து வீச்சு பயிற்சியாளராகவும், ஷான் மெக்டெர்மோட்-ஐ பவுலிங் கோச்சராகவும் நியமித்துள்ளது.

மிக்கி ஆர்தர் இந்த மாதம் இறுதியில் பாகிஸ்தான் சென்று விளையாடுகிறது. அப்போது இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிவை ஏற்பார்.
Tags:    

Similar News