ஆசிய லெவன் - உலக லெவன் அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் எம்எஸ் டோனி களம் இறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த போட்டியை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. இந்த போட்டிக்கான ஆசிய லெவன் அணிக்காக விளையாட இந்திய வீரர்கள் டோனி, விராட்கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர்குமார், ரவீந்திர ஜடேஜா ஆகியோரை அனுமதிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு, வங்காளதேச கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்து இருக்கிறது. இதனால் ஆசிய லெவன் அணிக்காக டோனி களம் இறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.