செய்திகள்
சவுரப் சவுத்ரி

ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல்: சவுரப் சவுத்ரி வெள்ளி பதக்கம் வென்றார்

Published On 2019-11-11 16:17 IST   |   Update On 2019-11-11 16:17:00 IST
இந்தியாவின் இளம் வீரரான சவுரப் சவுத்ரி 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் 244.5 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
14-வது ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி கத்தார் நாட்டின் தோகாவில் உள்ள லூசாய்ல் ஷுட்டிங் வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியா சார்பில் 17 வயதான சவுரப் சவுத்ரி கலந்து கொண்டார்.

தகுதிச் சுற்றில் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அதில் 244.5 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். வடகொரியாவின் கிம் சாங் குக் 246.5 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.

ஈரான் வீரர் பொரௌகி ஜாவித் வெண்கலப்பதக்கம் வென்றார். அடுத்த வருடம் டோக்கியோவில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News