செய்திகள்
ஏபி டி வில்லியர்ஸ்

பாகிஸ்தான் சூப்பர் லீக்: ஏலத்தில் இருந்து விலகினார் ஏபி டி வில்லியர்ஸ்

Published On 2019-11-11 10:25 GMT   |   Update On 2019-11-11 10:25 GMT
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா முன்னாள் வீர் ஏபி டி வில்லியர்ஸ் வீரர்கள் ஏல பட்டியலில் இருந்து விலகியுள்ளார்.
தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும்போது ஐபிஎல் உள்பட ஒன்றிரண்டு டி20 லீக்கில்தான் விளையாடினார்.

சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றபின் பல்வேறு டி20 லீக்கில் விளையாட முடிவு செய்தார். அதன்படிதான் இந்த ஆண்டு முடிவடைந்த பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் குவாலண்டர்ஸ் அணிக்காக விளையாடினார்.

7 போட்டிகளில் விளையாடிய பின் காயத்தால் வெளியேறினார். 7 போட்டியில் ஒரு அரைசதத்துடன் 218 ரன்கள் சேர்த்தார். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இந்த ஏல பட்டியலில் இருந்து ஏபி டி வில்லியர்ஸ் விலக முடிவு செய்துள்ளார்.

அடுத்த வருடம் நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏபி டி வில்லியர்ஸ் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Tags:    

Similar News