செய்திகள்
ரோகித் சர்மா

3-வது டி20 கிரிக்கெட்: இந்தியா முதலில் பேட்டிங்- மணிஷ் பாண்டேவுக்கு இடம்

Published On 2019-11-10 13:14 GMT   |   Update On 2019-11-10 13:14 GMT
நாக்பூரில் நடக்கும் வங்காளதேச அணிக்கெதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாக்பூரில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது.

ரோகித் சர்மா டாஸ் சுண்ட, வங்காளதேச அணி கேப்டன் மெஹ்முதுல்லா ‘ஹெட்’ என அழைத்தார். அவர் அழைத்தபடி ‘ஹெட்’ விழ பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் குருணால் பாண்டியாவுக்குப் பதிலாக மணிஷ் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளார். வங்காளதேச அணியில் மொசாடெக் ஹொசைனுக்குப் பதிலாக முகமது மிதுன் சேர்க்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News