செய்திகள்
அதிரடி காட்டிய இந்திய வீராங்கனை

பெண்கள் கிரிக்கெட் - முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இந்தியா

Published On 2019-11-10 05:08 GMT   |   Update On 2019-11-10 05:08 GMT
செயிண்ட் லூசியாவில் நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய பெண்கள் அணி.
செயிண்ட் லுசியா:

இந்திய பெண்கள் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என இந்திய அணி கைப்பற்றியது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா பெண்கள் அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது.

செயிண்ட் லுசியாவில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
 
அதன்படி, இந்திய பெண்கள் அணி முதலில் ஆடியது.

தொடக்க ஆட்டக்காரர்களான ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா இருவரும் அதிரடியாக ஆடினர். இருவரும் அரைசதம் கடந்தனர். இறுதியில், இந்திய பெண்கள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. ஷபாலி வர்மா 73 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 67 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். 

இதையடுத்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் அணி களமிறங்கியது. இந்திய அணியினரின் பந்து வீச்சில் சிக்கி நிலைகுலைந்தனர்.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 101 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய பெண்கள் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
Tags:    

Similar News