செய்திகள்
கோல் அடித்த மகிழ்ச்சியில் கொல்கத்தா அணியினர்

ஐஎஸ்எல் கால்பந்து - ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி மூன்றாவது வெற்றி பெற்றது கொல்கத்தா

Published On 2019-11-09 16:48 GMT   |   Update On 2019-11-09 16:48 GMT
கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணி ஜாம்ஷெட்பூர் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
கொல்கத்தா;

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் கோல் அடிக்க முயன்றன. ஆனாலும் யாரும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியின் முடிவில் 0- 0 என இரு அணிகளும் சமனிலை வகித்தன.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 57 மற்றும் 71வது நிமிடங்களில் கொல்கத்தா அணி வீரர் ராய் கிருஷ்ணா இரு கோல்கள் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். 
 
ஆட்டத்தின் இறுதியில் 85-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணி வீரர் செர்ஜியோ கேசில் ஒரு கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகக் 94-வது நிமிடத்தில் எடு கார்சியா ஒரு கோல் அடித்தார். 

இறுதியில், கொல்கத்தா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை தோற்கடித்தது, இதன்மூலம் மூன்றாவது வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது.
Tags:    

Similar News