செய்திகள்
டேவிட் வார்னர்

3-வது டி20 போட்டியில் இலங்கையை துவம்சம் செய்து ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா

Published On 2019-11-01 18:05 IST   |   Update On 2019-11-01 18:05:00 IST
மெல்போர்னில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் வார்னரின் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை 6 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் அடித்தது. அந்த அணியின் பெரேரா அதிகபட்சமாக 57 ரன்கள் விளாசினார். ராஜபக்சே 17 ரன்களும், பெர்னாண்டோ 20 ரன்களும் சேர்த்தனர்.

பின்னர் 143 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது பேட்டிங் செய்தது. டேவிட் வார்னர் ஆட்டமிழக்காமல் 50 பந்தில் 57 ரன்கள் விளாச 17.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் சேர்த்து அபார வெற்றி பெற்றது. ஆரோன் பிஞ்ச் 25 பந்தில் 37 ரன்கள் எடுத்தார்.



ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்ததால் இலங்கை அணியை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது.

Similar News