செய்திகள்
மேரி கோம்

பெண்கள் உலக குத்துச்சண்டை - அரையிறுதிக்கு முன்னேறினார் மேரி கோம்

Published On 2019-10-10 12:01 IST   |   Update On 2019-10-10 12:01:00 IST
11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் 5-0 என்ற கணக்கில் கொலம்பிய வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
உலன் உடே:

11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் உலன் உடே நகரில் நடந்து வருகிறது. இதில் 51 கிலோ எடைப்பிரிவு காலிறுதி சுற்றில் 6 முறை உலக சாம்பியனான இந்தியாவின் மேரி கோம், கொலம்பிய வீராங்கனை வாலன்சியா விக்டோரியாவுடன் மோதினார். 

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மேரிகோம் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் கொலம்பிய வீராங்கனையை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் மேரி கோம் அரைறுதிக்கு முன்னேறியுள்ளார். மேலும் உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டி 51 கிலோ எடைப்பிரிவில் முதன் முறையாக பதக்கத்தை உறுதி செய்துள்ளார். உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டிகளில் 8வது பதக்கத்தை உறுதி செய்திருக்கிறார்.

இந்த ஆண்டு மட்டும், கவுஹாத்தியில் நடந்த இந்தியா ஓபன் மற்றும் இந்தோனேசியாவில் நடந்த பிரசிடெண்ட் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் மேரி கோம் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News