செய்திகள்

உலக கோப்பையில் மீண்டும் களமிறங்கும் சச்சின் -புதிய அவதாரம்

Published On 2019-05-30 07:15 GMT   |   Update On 2019-05-30 09:57 GMT
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சச்சின் டெண்டுல்கர் உலக கோப்பையில் மீண்டும் களமிறங்க உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக இருந்தவர் சச்சின் டெண்டுல்கர். இந்திய அணியில் இருந்து, இவர் உலக கோப்பையில் ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.

இன்றளவும் சச்சின் டெண்டுல்கரின் ரசிகர்கள் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. பல்வேறு தொடர்களில் பலமுறை  ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

உலக கோப்பை கிரிக்கெட் இன்று தொடங்க உள்ளது. முதல் சுற்றான இதில், இங்கிலாந்து-தென்ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது.

இதில் கமெண்டரி பாக்ஸில் சச்சின், வர்ணனையாளராக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கரின் இந்த புதிய அவதாரம், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் மதியம் 1.30 மணி அளவில் தனி தொகுப்பாக 'Sachin Opens Again' எனும் தலைப்பில் ஒளிபரப்பாக உள்ளது.

    
 
Tags:    

Similar News