செய்திகள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது போட்டி - பார்ட்னர்ஷிப்பில் ரோகித், தவான் ஜோடி சாதனை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் ரோகித் சர்மா ஷிகர் தவான் ஜோடி பார்ட்னர்ஷிப்பில் சாதனை படைத்துள்ளது. #INDvAUS #Rohitsharma #ShikarDhawan
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கடந்த சில போட்டிகளாக இந்திய அணியின் தொடக்கம் சரியாக அமையவில்லை.
இந்நிலையில், இந்திய அணி 12வது ரன்னை அடித்த போது ரோகித், தவான் ஜோடி 4 ஆயிரத்து 389 ரன்களை சேர்த்தது. இந்த ஜோடி சச்சின் - சேவாக் ஜோடியின் முந்தைய பார்ட்னர்ஷிப்பை கடந்து இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.
இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு ரோகித், தவான் ஜோடி 193 ரன்கள் எடுத்ததும் சாதனையாகும்.
பார்ட்னர்ஷிப் முதல் இடத்தில் சச்சின் - கங்குலி ஜோடி 8 ஆயிரத்து 227 ரன்களை எடுத்து முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #INDvAUS #Rohitsharma #ShikarDhawan