செய்திகள்

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்- ஸ்ரீகாந்த் கிதாம்பி அவுட்

Published On 2019-01-25 13:14 GMT   |   Update On 2019-01-25 13:14 GMT
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், ஸ்ரீகாந்த் கிதாம்பி காலிறுதியோடு வெளியேறினார்.
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டமொன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் தாய்லாந்தின் போர்ன்பவீ சோசுவாங்கை எதிர்கொண்டார். இதில் சாய்னா 21-7, 21-18 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் ஸ்ரீகாந்தி கிதாம்பி இந்தோனேசியாவின் ஜோனாதன் கிறிஸ்டியை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் கிதாம்பி 18-1, 19-21 எனத் தோல்வியடைந்து வெளியேறினார்.
Tags:    

Similar News