செய்திகள்

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாய்னா நேவால் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

Published On 2019-01-23 13:19 GMT   |   Update On 2019-01-23 13:19 GMT
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் சாய்னா நேவால், 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்தார். பிரனீத், சுபாங்கர் தோல்வியடைந்தனர்.
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால், இந்தோனேசியாவின் தினார் தியா ஆயுஸ்டைன்-ஐ எதிர்கொண்டார். 8-ம் நிலை வீராங்கனையான சாய்னா நேவால், 50-ம் நிலை வீராங்கனையான தினாரிடம் முதல் செட்டை 7-21 என அதிர்ச்சிகரமாக இழந்தார். பின்னர் சுதாரித்துக்கொண்ட சாய்னா 2-வது செட்டை 21-16 எனவும், 3-வது செட்டை 21-11 எனவும் கைப்பற்றி வெற்றி பெற்றார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பிரனீதர் 12-21, 16-21 என சீனாவின் சென் லாங்கிடம் தோல்வியடைந்து வெளியேறினார். சுபாங்கர் டென்மார்க்கின் விக்டர் அலெக்சனிடம் 14-21, 21-19, 15-21 என தோல்வியடைந்தார்.
Tags:    

Similar News