செய்திகள்

உலக பேட்மிண்டன் பைனல்ஸ்: பிவி சிந்து, சமீர் வர்மா நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்

Published On 2018-12-14 14:52 GMT   |   Update On 2018-12-14 14:52 GMT
சீனாவில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரில் பிவி சிந்து, சமீர் வர்மா நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். #PVSindhu
உலக பேட்மிண்டன் தரவரிசையில் 8 முன்னணி வீரர்-வீராங்கனைகள் பற்கேற்று விளையாடும் உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடர் சீனாவில் உள்ள குவாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான பிரிவில் பிவி சிந்து முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றார்.

இன்று நடைபெற்ற 3-வது போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த ஷாங் பீவென் எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 21-9, 21-15 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறினார்.



ஆண்களுக்கான போட்டியில் சமீர் வர்மா தாய்லாந்தின் கன்டபோன் வாங்சரோயெனை எதிர்கொண்டார். இதில் சமீர் வர்மா 21-9, 21-18 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறினார்.
Tags:    

Similar News