செய்திகள்

ரஞ்சி டிராபியில் ஐதராபாத்தின் அக்சாத் ரெட்டி இரட்டை சதம் - 2வது நாள் ஆட்டநேர முடிவில் ஐதராபாத் 523/7

Published On 2018-11-13 16:00 GMT   |   Update On 2018-11-13 16:00 GMT
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணிக்கெதிராக ஐதராபாத் இரண்டாம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 523 ரன்கள் சேர்த்துள்ளது. கேப்டன் அக்சாத் ரெட்டி இரட்டை சதம் அடித்து அசத்தினார். #RanjiTrophy #AkshathReddy
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது சுற்று நேற்று தொடங்கியது. திருநெல்வேலியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாடு - ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது. டேன்மே அகர்வால், கேப்டன் அக்‌சாத் ரெட்டி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டேன்மே அகர்வால் 10 ரன்னிலும், ரோகித் ராயுடு 13 ரன்னிலும், ஹிமாலே அகர்வால் 29 ரன்னிலும் அவுட்டாகினர்.
 
4-வது விக்கெட்டுக்கு அக்‌சாத் ரெட்டி உடன் பவனகா சந்தீப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அக்‌சாத் ரெட்டி சதம் அடிக்க சந்தீப் அரைசதம் அடித்தார். இருவரும் முதல்நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். அக்‌சாத் ரெட்டி 114 ரன்களுடனும், சந்தீப் 74 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சந்தீப் பொறுப்புடன் விளையாடி சதமடித்தார். அவர் 130 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 246 ரன்கள் சேர்த்தது. அக்சாத் ரெட்டி அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் உள்ளார். 

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 523 ரன்கள் எடுத்துள்ளது. அக்சாத் ரெட்டி 248 ரன்களுடனும், சாமா மிலிந்த் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தமிழ்நாடு அணி சார்பில் விக்னேஷ், எம் முகமது, ரஹில் ஷா தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்கள். #RanjiTrophy #AkshathReddy
Tags:    

Similar News