செய்திகள்

ஐ.எஸ்.எல் கால்பந்து - சென்னை, டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது

Published On 2018-10-23 19:18 GMT   |   Update On 2018-10-23 19:18 GMT
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி அணிக்கும், டெல்லி டைனமோஸ் அணிக்கும் இடையிலான ஆட்டம் சமனிலையில் முடிந்தது. #ISL2018 #DelhiDynamos #ChennaiyinFC
5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னையின் எப்.சி, டெல்லி டைனமோஸ் அணிகள் மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இரு அணிகளும் நிதானமாக ஆடின. கோல் அடிக்க கிடைத்த வாய்ப்புகளை இரண்டு அணியினரும் பயன்படுத்தி கொள்ளவில்லை. இதனால் எந்த அணியும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

இறுதியில், சென்னையின் எப்.சி. அணிக்கும், டெல்லி டைனமோஸ் அணிக்கும் இடையிலான ஆட்டம் சமனிலையில் முடிந்தது. #ISL2018 #DelhiDynamos #ChennaiyinFC
Tags:    

Similar News