செய்திகள்

புரோ கபடி லீக் - தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தியது பெங்கால் வாரியர்ஸ்

Published On 2018-10-16 18:12 GMT   |   Update On 2018-10-16 18:12 GMT
புரோ கபடி லீக் போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 30-25 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணி வீழ்த்தியது. #ProKabaddi
சோனிபட்:

12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் அரியானா மாநிலம் சோனிபட்டில் நடந்த லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் விளையாடினர்.

இதனால் இரு அணிகளின் புள்ளிகள் சமனிலையில் இருந்து வந்தது. ஆட்டத்தின் இறுதியில், பெங்கால் வாரியர்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டது. இதையடுத்து, தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 30-25 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் அணி இரண்டாவது வெற்றியை பெற்றது. #ProKabaddi 
Tags:    

Similar News