செய்திகள்

எம்எஸ் டோனிதான் 4-வது இடத்திற்கு சரியான நபர்- ஜாகீர் கான்

Published On 2018-09-18 10:00 GMT   |   Update On 2018-09-18 10:00 GMT
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் 4-வது இடத்திற்கு டோனிதான் சரியான நபர் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் தெரிவித்துள்ளார். #MSDhoni #TeamIndia
இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தியா இன்னும் உலகக்கோப்பைக்கான அணியை கண்டறியவில்லை. குறிப்பாக 4, 5 மற்றும் 6-வது இடத்திற்கு சரியான நபரை அடையாளம் காணவில்லை. ரகானே, ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரெய்னா, லோகேஷ் ராகுல் ஆகியோர் இருந்த போதிலும் உறுதியாக இவர்தான் இந்த இடத்தில் விளையாடுவார் என்று குறிப்பிட முடியவில்லை.

குறிப்பாக 4-வது இடம் இன்னும் காலியாகவே இருப்பதாக கருதப்படுகிறது. இந்நிலையில் டோனி 4-வது இடத்திற்கு சரியான நபர் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து ஜாகீர்கான் கூறுகையில் ‘‘யாராவது ஒருவர் 4-ம் இடத்தில் களம் இறங்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். அது எம்எஸ் டோனியாகவே இருக்க முடியும். இந்திய அணியின் தோல்விகளைப் பார்த்தீர்கள் என்றால், நல்ல தொடக்கம் இல்லாத போட்டிகளில் தோல்விகளை சந்தித்திருக்கும். மோசமான தொடக்கத்திலிருந்து பின்னால் மீள முடிவதில்லை.



எனவே 4-ம் நிலையில் அனுபவமிக்க வீரர் இறங்க வேண்டும். அந்த நிலையில் நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்து வெற்றிப்பாதைக்குத் திருப்பும் வீரர் தேவை. அவர் அவருடன் தனக்கு பின்னால் வரும் வீரர்களையும் தன்னுடன் சேர்த்து கடைசி வரை கொண்டு செல்பவராக இருக்க வேண்டும். இதற்கு தோனியை விட்டால் வேறு ஆளில்லை” என்றார்.
Tags:    

Similar News