செய்திகள்

அதிக ஒருநாள் போட்டியில் விளையாடி இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் சாதனை

Published On 2018-09-11 13:12 GMT   |   Update On 2018-09-11 13:12 GMT
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் அதிக சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடி சாதனைப் படைத்துள்ளார். #MithaliRaj
ஐசிசி பெண்கள் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா - இலங்கை இடையிலான ஒருநாள் போட்டி காலே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்திய அணியில் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த வீராங்கனையும் ஆன மிதாலி ராஜ் இடம்பிடித்திருந்தார்.



இது அவருக்கு 118-வது சர்வதேச ஒருநாள் போட்டியாகும். இதன்மூலம் அதிக சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் இங்கிலாந்து வீராங்கனை சார்லோட் எட்வர்ட்ஸ் 117 போட்டியில் விளையாடி சாதனைப் படைத்திருந்தார்.
Tags:    

Similar News