செய்திகள்

தேசிய கார் பந்தயம்- கவுரவ்கில் முதலிடம்

Published On 2018-09-10 08:09 GMT   |   Update On 2018-09-10 08:09 GMT
மாருதி சுசுகி தேசிய கார் பந்தயத்தில் நடப்பு சாம்பியன் கவுரவ்கில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் விஸ்வாஸ் அனைத்து பிரிவிலும் வென்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.


தக்ஷின்டேர் எனப்படும் மாருதி சுசுகி தேசிய கார் பந்தயத்தில் நடப்பு சாம்பியன் கவுரவ்கில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

பெங்களூரில் இருந்து கோவா வரை 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூர கார்பந்தயமான தக்ஷின்டேர் 5 நாட்கள் நடைபெற்றது. தேசிய கார் பந்தயத்தில் 3 முறை சாம்பியன் என கவுரவ்கில் 15 சிறப்பு நிலைகளில் வென்று சகவீரர் மூசா செரிப்புடன் இணைந்து முதலிடம் பெற்றார். பிலிப்போஸ் மத்தாய் மூர்த்தி ஜோடி 2-வது இடத்தையும், சாம்ராஜ் யாதவ்-கரண் ஜோடி 3-வது இடத்தை பிடித்தன.

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் விஸ்வாஸ் அனைத்து பிரிவிலும் வென்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
Tags:    

Similar News