செய்திகள்

மயாங்க் அகர்வாலை எங்கே?- தேர்வாளர்கள் மீது ஹர்பஜன் சிங் பாய்ச்சல்

Published On 2018-09-06 21:21 IST   |   Update On 2018-09-06 21:21:00 IST
மயாங்க் அகர்வாலுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காததற்கு சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கடும் விமர்சனம் செய்துள்ளார். #HarbhajanSingh
இந்தியா ஒருநாள் கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் 15-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையில் அணி களம் இறங்க இருக்கிறது. இதற்கான அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதில் ரஞ்சி டிராபி மற்றும் உள்ளூர் ஒருநாள் தொடர், இந்தியா ஏ அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மயாங்க் அகர்வாலுக்கு இடம் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார்.

ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘மயாங்க் அகர்வாலை எங்கே? ஏகப்பட்ட ரன்களைக் குவித்த பின்னரும், அவரை இந்திய தேசிய அணிக்காக வீரர்கள் பட்டியலில் பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதிமுறை என்று நினைக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News