செய்திகள்

4-வது டெஸ்டில் வெற்றி பெறுவோம் - பட்லர் நம்பிக்கை

Published On 2018-09-02 07:52 GMT   |   Update On 2018-09-02 07:52 GMT
233 ரன்கள் முன்னிலை பெற்று இருப்பதால் இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் வெற்றி பெறுவோம் என்று இங்கிலாந்து பேட்ஸ்மேன் பட்லர் கூறியுள்ளார். #ENGvIND #JosButler
சவுதம்டன்:

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்னும், இந்தியா முதல் இன்னிங் சில் 273 ரன்னும் எடுத்தன. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்து இருந்தது. அந்த அணி 233 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கைவசம் 2 விக்கெட் உள்ளது. குர்ரான் 37 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

நேற்றைய போட்டிக்கு பின் இங்கிலாந்து பேட்ஸ்மேன் பட்லர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த டெஸ்டில் எங்களால் (இங்கிலாந்து) நிச்சயமாக வெற்றி பெற முடியும். இந்த ஆடுகளத்தில் 2-வது இன்னிங்கில் ரன்கள் சேர்ப்பது இந்தியாவுக்கு சவாலாக இருக்கும். மொய்ன் அலி, ஆதில் ரஷித், மற்றும் வேகப்பந்து வீரர்கள் சிறப்பாக பந்து வீசுவார்கள். இதனால் எங்களுக்கு இந்த டெஸ்டில் வெற்றி வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #ENGvIND  #JosButler
Tags:    

Similar News