செய்திகள்

4 ஆக்கி வீராங்கனைகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு - ஒடிசா முதல்-மந்திரி அறிவிப்பு

Published On 2018-09-01 23:03 GMT   |   Update On 2018-09-01 23:03 GMT
ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய பெண்கள் ஆக்கி அணியில் இடம் பிடித்துள்ள ஒடிசா மாநிலத்தை சேர்ந்த வீராங்கனைகள் ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என ஒடிசா முதல்வர் அறிவித்துள்ளார். #NaveenPatnaik #AsianGames2018
புவனேஸ்வரம்:

ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய பெண்கள் ஆக்கி அணியில் இடம் பிடித்து இருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த வீராங்கனைகள் சுனிதா லக்ரா, நமிதா தோப்போ, நிலிமா மின்ஸ், தீப் கிரேஸ் எக்கா ஆகியோருக்கு தலா ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என்று ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் நேற்று அறிவித்தார்.



இதேபோல் ஆசிய விளையாட்டு போட்டியில் ஹெப்டத்லான் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த வீராங்கனை ஸ்வப்னா பர்மன் வீட்டுக்கு மத்திய மந்திரி எஸ்.எஸ்.அலுவாலியா நேற்று சென்று அவரது பெற்றோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் ஸ்வப்னாவுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் கூறினார்.   #NaveenPatnaik #AsianGames2018
Tags:    

Similar News