செய்திகள்

உயரம் தாண்டுதல்- இந்திய வீரர் சேத்தன் இறுதிப்போட்டிக்கு தகுதி

Published On 2018-08-25 12:05 IST   |   Update On 2018-08-25 12:05:00 IST
ஆசிய விளையாட்டு உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் சேத்தன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். #AsianGames2018
18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவில் உள்ள ஜகார்தா மற்றும் பாலெம் பேங் ஆகிய 2 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதன் தடகள போட்டிகள் இன்று தொடங்கியது. ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியின் தகுதி சுற்று நடந்தது. ‘பி’ பிரிவில் இந்திய வீரர் சேத்தன் பாலசுப்பிரமணியா இடம் பெற்று இருந்தார். அவர் 2.15 மீட்டர் உயரம் தாண்டி 5-வது இடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

400 மீட்டர் ஓட்டத்தின் அரை இறுதிக்கு இந்திய வீரர்கள் முகமது அனஸ் மற்றும் ஆரோக்யராஜ் தகுதி பெற்றனர்.

முகமது அனஸ்

‘தகுதி சுற்று 1’ ஓட்டத்தில் முகமது அனஸ் 45.63 வினாடியில் கடந்து முதல் இடத்தையும், ‘தகுதி சுற்று 4’ ஓட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த ஆரோக்யராஜ் 46.83 வினாடியில் கடந்து 2-வது இடத்தையும் பிடித்தனர். இதன்மூலம் இருவரும் அரை இறுதிக்கு முன்னேறினர்.

கைப்பந்து போட்டியின் ஆண்கள் பிரிவில் இந்தியா 25-12, 25-21, 25-17 என்ற கணக்கில் மாலத்தீவை வீழ்த்தியது. #Asaingames2018
Tags:    

Similar News