செய்திகள்

டிஎன்பிஎல் எலிமினேட்டர்- காரைக்குடி காளைக்கு 138 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கோவை கிங்ஸ்

Published On 2018-08-09 15:53 GMT   |   Update On 2018-08-09 15:53 GMT
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் எலிமினேட்டர் சுற்றில் காரைக்கு காளைக்கு 138 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கோவை கிங்ஸ். #TNPL2018
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் எலிமினேட்டர் சுற்று திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. கோவை கிங்ஸ் அணிக்கெதிராக காரைக்குடி காளை டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி கோவை கிங்ஸ் அணியின் ஷாருக்கான், அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஷாருக்கான 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அபிநவ் முகுந்த் 51 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.



அதன்பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் வெளியேற கோவை கிங்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது. காரைக்குடி காளை அணியின் ராஜ்குமார் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
Tags:    

Similar News