செய்திகள்

இங்கிலாந்து அணியில் இருந்து மொயீன் அலி, போர்ட்டர் விடுவிப்பு

Published On 2018-08-01 13:38 GMT   |   Update On 2018-08-01 13:38 GMT
இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் ஆடும் லெவனில் இடம் கிடைக்காததால், டி20 போட்டியில் விளையாட மொயீன் அலி விடுவிக்கப்பட்டுள்ளார். #ENGvIND
இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் மொயீன் அலி, போர்ட்டர் ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.

ஆனால் ஆடும் லெவனில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. தற்போது இங்கிலாந்தில் டி20 பிளாஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. மொயீன் அலி வொர்செஸ்டர்ஷைர் ரேபிட்ஸ் அணிக்காகவும், போர்ட்டர் எசக்ஸ் ஈகிள் அணிக்காகவும் விளையாடி வருகின்றன.


போர்ட்டர்

டி20 பிளாஸ்ட் தொடரில் பாதி ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இவர்கள் பங்கேற்றுள்ள அணிகள் முதல் நான்கு இடத்திற்குள் வந்தால்தான் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். ஐந்து நாட்கள் சும்மா இருப்பதை விட டி20யில் விளையாட விரும்பினார்கள்.

இதை ஏற்றுக்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இருவரையும் இங்கிலாந்து அணியில் இருந்து விடுவித்துள்ளது.
Tags:    

Similar News