செய்திகள்

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டனில் வெற்றிக்கோப்பையை தவறவிட்ட பி.வி சிந்து

Published On 2018-07-15 11:56 GMT   |   Update On 2018-07-15 11:56 GMT
பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தார். #PVSindhu
பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் நேற்று  நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்காவை வீழ்த்தி பி.வி சிந்து இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற பெண்களுக்கான இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை நோசோமி ஒகுஹாராவை எதிர்க்கொண்டார். மிகவும் கடுமையாக போராடிய பி.வி சிந்து 15-21, 18-21 என்ற செட் கணக்கில் தனது வெற்றி வாய்ப்பை ஜப்பான் வீரரிடம் பறிகொடுத்தார். #PVSindhu
Tags:    

Similar News